தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், அதிக எண்ணிக்கையிலான ஆண்கள், படிப்பில் பின்தங்கியவர்கள் போன்றவர்களே இந்தியச் சிறைச்சாலைகளில் அதிகம் இருப்பதகாக ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தேசியக் குற்றப்பதிவு மூலம் சிறைச்சாலைகளின் தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. coque iphone pas cher இதன்படி, சிறைகளில் தண்டனை அனுபவித்துவரும் மூன்று கைதிகளில் இரண்டு பேர், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேந்தவர்களாக உள்ளனர். coque iphone en ligne பெரும்பாலான கைதிகள், 10-ம் வகுப்புக்கு முன் கல்வியை நிறுத்தியவர்கள். சிறைக்கைதிகளில் 95 சதவிகிதம் பேர் ஆண்களே. நாட்டிலேயே உத்தரப்பிரதேச சிறையில்தான் அதிக அளவு பெண் கைதிகள் உள்ளனர். இந்தச் சிறையில் 85,214 ஆண் கைதிகளும், 3,533 பெண் கைதிகளும் உள்ளனர். நாட்டின் 4,19,623 கைதிகள், 67 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். coque iphone 2019 நாட்டிலேயே அதிகபட்சமாக பீகார் சிறைகளில் உள்ள 82.4 சதவிகிதக் கைதிகள் விசாரணைக் கைதிகள். குறைந்தபட்சமாக உத்தரகாண்ட் சிறைகளில் உள்ள 52.7 சதவிகித பேர் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். விசாரணைக் கைதிகளின் தேசிய சராசரி 67.2 சதவிகிதம். கைதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக அளவிலான கைதிகள் உள்ளனர். இதற்கு அடுத்ததாக மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இருக்கின்றன. நாட்டிலேயே லட்சத்தீவுகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் கைதிகள் உள்ளனர். தாத்ரா, நகர் ஹவேலி, டெல்லி, சட்டீஸ்கர் ஆகிய மாநிலச் சிறைச்சாலைகள் அதிக அளவு நெரிசல் மிகுந்த சிறைகளாக இருக்கின்றன. coque iphone 8 வழக்குகளை விரைந்து முடிக்காமல் இழத்தடிக்கப்படுவதால், சிறைகளில் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. விசாரணைக் கைதிகளின் அதிகரிப்பாலேயே சிறைச்சாலைகள் நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன.
வட மாநிலத்தில் உள்ள சிறைகளில், கம்பிக்குப் பின்னால் இருப்பவர்களில் அதிகமானோர் தாழ்த்தப்பட்டவர்களே. நூற்றாண்டுகளாக நீடித்துவரும் சாதிப் பாகுபாடுகள் காரணமாகவும், விளிம்புநிலையில் இருப்பதாலும், போலீஸார் தங்கள் மீது பொய் வழக்குகள் போட்டு வழக்குகளைத் திரிப்பதாக இந்தியா முழுவதிலும் உள்ள தலித் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். coque iphone soldes சிறைகளில் உள்ளவர்களில் 70 சதவிகிதம் பேர் இந்துக்கள் எனவும், ஐந்து கைதிகளில் ஒருவர் முஸ்லிம் எனவும் தேசிய குற்றப்பதிவு தரவுகள் தெரிவிக்கின்றன.